திங்கள், 6 ஜூலை, 2015



 மருதாணி LAWSONIA INERMIS

        இது சனி பகவான் மூலிகை என்பதால் பேய், பூதம்,துஷ்ட தேவதை விலகிவிடும். இதன் பூவையும், உலர்ந்த காயையும் தூள் செய்து சாம்பராணியுடன் கலந்து புகைக்க பேய், பூதம் விலகி ஓடும். பில்லி,சூனியம் நம்மை அண்டாது. வெள்ளி, திங்கள் வீட்டில் இதனைப் புகைக்க வேண்டும்.

பொதுவான குணம் 
மருதாணி எல்லாவகை நிலங்களிலும் வளரக் கூடியது. இதை விதை மூலமும்,கட்டிங் மூலமூம் இனப் பெருக்கம் செய்வார்கள்.வெப்பத்தைத் தாங்கக்கூடியது.இது ஏப்ரல், மே மாதங்களில் பூத்துக் குலுங்கும்.உருண்டையான காய்கள் உண்டாகும்,இதில் வறண்ட பின் சுமார் 45 விதைகள்இருக்கும். 
        இது மருத்துவ குணமுடையது. இதை அட்டகர்ம மூலிகை என்றும் கூறுவர்.  விதையிலிருந்து எண்ணெய் எடுக்கிறார்கள். இதன் இலைகளை 5நாட்கள் நிழலில் உலர்த்திப் பயன்படுத்துவார்கள். 

    வேறுபெயர்கள் மறுதோன்றிஅழவணம்ஐவணம் மற்றும் மெகந்தி ஆகியவை.
ஆங்கிலப் பெயர் LAWSONIA INERMIS தாவரக்குடும்பம் : LYTHRACEAE
மருத்துவக் குணங்கள்
மருதாணி இலை கிருமி நாசினிகண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது. நகசுத்தி வராமல் தடுக்கும். புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து. கைகால்விரல் நகங்களுக்கு அரைத்துப் பூசி அழகூட்டுவார்கள். பெண்களுக்குப் பேய் பிடிக்காது. மருதாணி வைத்துக் கொள்ளும் வழக்கம் சங்க காலத்திலேயே இருந்தது.
மேகநோய் -: பால்வினை நோயான மேக நோய்க்கு இது சிறந்த மருந்து. இதன் இலை  10 கிராம் அளவு மிளகுஒரு பூண்டுதிரி, 5 கிராம் மஞ்சள் ஆகிய வற்றை அரைத்து நாளும் வெறும் வயிற்றில் குடித்துப் பால் அருந்தவும். புளிபுகைகாரம் கூடாதுஇதனால் மேக நோய் அதனால் ஏற்படும் கிரந்திப் புண்அரிப்பு ஆகியன குணமாகும். 10 - 20 நாள் சாப்பிட வேண்டும்.
தோல் நோய் -: மேக நோயால் ஏற்பட்ட தோல் பற்றிய அரிப்புபடை ஆகிய நோய்களுக்குஇந்த இலையை அரிசிச் சோற்றுடன் இரவு ஊறப் போட்டு காலை வெறும் வயிற்றில் நீராகாரமாகச் சாப்பிட வேண்டும். உப்பில்லாத பத்தியம் இருத்தல் வேண்டும். 10 - 15 நாள் சாப்பிட வேண்டும்.
புண்கள் - ஆறாத வாய்ப் புண்அம்மைப் புண் ஆகியவற்றிற்கு இதன் இலையை அரைத்து நீரில் கரைத்து வடித்து வாய் கொப்பளிக்கலாம். அரைத்து அம்மைப் புண்களுக்குப் பூசலாம். 3-5 நாளில் குணமாகும். கட்டிகளுக்கும் அரைத்துப்பற்றிடலாம்.
முடிவளர -: இதன் தைலம் முடி வளர்க்கும் இள நரையை அகற்றும். இரும்பு வாணலியில் தேங்காய் நெய் 500 மி.லி. விட்டு இதன் இலை 100 கிராம் போட்டு பொரித்து எடுக்கவும். இலையின் சாறு எண்ணெயில் சேர்த்து சிவப்பாக மாறிவிடும். நறுமணத்திறுகாக 10 கிராம் சந்தனத் தூள் போடலாம். அரைத்துப் போட்டுக் காய்ச்சலாம். இந்த தைலத்தை நாளும் தலைக்குத் தேய்க்க முடி வளரும் நரைமாறும்.
உறக்கமின்மை -: தூக்கமின்மைக்குத் தூக்க மாத்திரை சாப்பிடுதல் கூடாது. அது நரம்புத் தளர்ச்சியை உண்டாக்கும். பைத்தியம் பிடிக்க வைக்கும். மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றிதலைமாட்டில் வைத்துப் படுத்தால் தூக்கம் வரும். பூவின் மணம் தூக்கத்தை வரவழைக்கும். ஒருசிலருக்கு இம்மணம் தலைவலியை உண்டாக்கும்.

         கரப்பான் புண் : கரப்பான் புண் என்பது கரும்படையுடனை நீரொழுகும் புண்ணாகும். இது அரிப்பையும் கொடுக்கும். நீர் வடியும் இடம் பட்ட இடம் படையுடன் புண் உண்டாகும். இதன் வேர்பட்டை 50 கிராம்முற்றிய தேஙுகாய் 100 கிராம்மிருதார்சிங்கி 15 கிராம்அரைத்து ஆமணுக்கு நெய் விட்டு மேல் பூச்சாகப் பயன்படுத்தலாம். இதனால் சகல கரப்பான் படையும் புண்ணும் குணமாகும்.
கால் ஆணி : இதன் வேர்ப் பட்டையை அரைத்துப் பற்றிட கால் ஆணிபுண் குணமாகும்.
படைகள் : கரும்படைவண்ணான் படை கால் இடுக்கிலும்இடுப்பிலும்,கழுத்துகை இடுக்கிலும் வரும். இதற்கு ஒரு பிடி மருதாணி இலையுடன் 5கிராம் 501 பார் கதர் சோப்புவைத்து அரைத்துக் களிம்பு போல தடவி வந்தால் கரும்படை யாவும் சுகமடையும். 10 -15 நாள் பூச வேண்டும். வண்டு கடிக்கும் சொறிசிரங்கிற்கும் இதனைப் பூச்சு மருந்தாகப் பயன்படுத்தலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக