ஞாயிறு, 26 ஜூலை, 2015

கபசுரக்குடிநீரும்,நிலவேம்பு குடிநீரும்.

 மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். நிலவேம்பு குடிநீரைப்போன்று கபசுரக் குடிநீரையும் அருந்துங்க.

கபசுரக் குடிநீர்

இதுகுறித்து சித்த மருத்துவரும் முதுநிலை பயிற்சி மாணவருமான ரமேஷ்  கூறியதாவது: -
"விலங்குகள், பறவைகளின் கிருமிகளில் இருந்து மனிதர்களுக்கு பரவும் நோய் தொற்றுகளை தடுக்கும் ஆற்றல் மூலிகை மருந்துகளில் உள்ளது. பன்றிக்காய்ச்சலின் அறி குறியாக சளி, இருமல் ஆகிய வை கூறப்படுகிறது. மூலிகை கள் மூலம் தயாரிக்கப்படும் கபசுரக்குடிநீர் சளி, இரும லால் ஏற்படும் எந்தவித மான காய்ச்சலையும் போக் கக்கூடியது.
இதில் இரண்டு விதமான மூலிகைமருந் துகளை தயாரிக்கலாம். முதலாவதாக நன்னாரி, தூதுவளை, சிறுகாஞ் சொறி வேர், ஆடுதொடா, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், சுக்கு, இம் பூரம், பங்கம்பாளை ஆகிய மூலிகைகளை கொண்டு தண்ணீர் கலந்து கஷாயம் தயாரித்து 8ல் ஒரு பங்காக வற்றவைத்து அருந்த வேண்டும்.

மற்றொரு முறை யில் உத்தாமனை, நொச்சி, கண்டங்கத்திரி, நெல்லி தோல், இஞ்சி, ஆடாதொ டா ஆகியவற்றை இட்லி அவிப்பது போல் பிட்டவித்து பின்னர் இடித் துப் பிழிந்து திப்பிலி பொடி சேர்த்து மூலிகைக் குடிநீர் தயார் செய்து நாளொன் றுக்கு இருவேளை 30 மில்லி வீதம் 3 முதல் 5 நாட்கள் அருந்தினால் எத்தகைய சளி மற்றும் காய்ச்சலும் குணமடையும்.
இதில், பெரும்பாலான மூலிகைச் செடிகள் நெல்லை சித்த மருத்துவக் கல்லூரியில் வளர்க்கப்படுகின்றன.
எனவே, நிலவேம்பு குடிநீர் போல் கபசுரக்குடிநீர் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் சித்த மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இதை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் ".
 சித்த மருத்துவத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு என தனியாக மருந்து இல்லாவிட்டாலும் எல்லாவிதமான காய்ச்சல் மற்றும் சளியின் தன்மைக்கு ஏற்ப மூலிகை மருந்துகள் உள்ளன.
இதை நோயாளிகளை பரிசோதித்து' கபசுரக் குடிநீர்'வழங்க சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
பன்றிக்காய்ச்சல் மட்டுமல்ல எந்த காய்ச்சலும் அதற்கான கிருமிகளும் இந்த குடி நீருக்கு கட்டுப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மலேரியா,டைபாய்ட்,டெங்கு  போன்ற காய்ச்சல்களையும் ஆரம்பத்தில் கண்டுணர்ந்து அதற்கான மருத்துவம் செய்து கொள்ளாவிட்டால் உயிருக்கு ஆபத்துதான்.
அதே போல் தான் இந்த பன்றிக்காய்ச்சலும்.ஆனால் இதற்கு மத்திய அரசு அதிகப்பயங்காட்டி வருவதை தவிர்த்து இரத்தப் பரிசோதனை செய்ய 5000 ரூபாய்கள் பிடுங்கும் மருத்தவ் பரிசோதனை நிலையங்கள் மீது நடவடிக்கை எடுப்பதும் ,எல்லா அரசு மருத்துவமனைகளிலும் இதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தாலே போதும்.இந்த பன்றிக்காய்ச்சலை மட்டுமல்ல அதனால் உண்டாகும் பயத்தையும் மக்களிடமிருந்து போக்கிடலாம். அரசு விளம்பரம்-சிகிச்சை தரும் மருத்துவர்கள் செய்து கொள்ளும் பாதுகாப்பு ஏற்பாடுகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை மனதளவில் பலவீனப்படுத்தி விடுகிறது.பயமே மக்களின் பாதி  உயிரை வாங்கி விடுகிறது.
பாம்பு கொத்தி விடத்தினால் இறந்தவர்களை விட பயத்தினால் இறப்பவர்கள்தான் அதிகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக