புதன், 1 அக்டோபர், 2014

சத்தியமங்கலத்தில் புத்தக கண்காட்சி -அழைப்பிதழ்-2014



மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். 
           சத்தியமங்கலம் புத்தக கண்காட்சி வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.


                    2014அக்டோபர் மாதம் 15ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வரை நம்ம சத்தியமங்கலத்தில் நடக்குதுங்க..இரண்டாம் நாளான 16 - 10 -2014 வியாழக்கிழமை அன்று 
 நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் -தமிழ்நாடு மற்றும் அரிமா K.லோகநாதன்( LOGU DRIVING SCHOOL ) லோகு டிரைவிங் ஸ்கூல்-சத்தியமங்கலம் அவர்களது தலைமையில் நடத்துகிறோம்.அப்போது காலை10.00மணியளவில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்த திட்டமிட்டு உள்ளோம்.,
                                         அல்லது 
                       ''கணினி கற்போம் வாங்க'' 
                                                                   என்னும் தலைப்பில் 
காலை 10.00மணிக்கும் + மாலை3.00மணிக்கும் 
    எழுதப் படிக்கத் தெரிந்த ஆண்,பெண்  அனைவருக்கும் வயது வேறுபாடின்றி 
 இணைய இணைப்புடன் கூடிய மடிக்கணினி வாயிலாக 
(1)கணினியின் பாகங்கள்,அவற்றின் பயன்பாடுகள் பற்றிய விளக்கம்,(2)தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சுப்பயிற்சி,
(3)ஈ மெயில் உருவாக்கும் பயிற்சி,அதன் பயன்பாடு பற்றிய விளக்கம்,(4)இணையத்தில் தேடலும்,தேவையும் பற்றிய விளக்கம்,
(5) சொந்தமாக வலைப்பதிவுகள் என்னும் வலைத்தளம் உருவாக்கி பயன்படுத்துதல் பற்றிய விளக்கம்,
(6)நகர்பேசி அதாவது மொபைலில் ஆன்டிராய்டு மென்பொருள் பயன்பாடும் அதனைப்பயன்படுத்துவது பற்றியும் 
        பயிற்சி அளிக்கப்படும்.
                 பிறகு கணினி வல்லுநர்களுக்கும் கணினி பற்றிய அடிப்படை கல்வி கற்றவர்களுக்கும் இடையே கற்றலில் மற்றும் கற்பித்தலில் குறைபாடு,சந்தேகம் பற்றிய விவாதம் நடைபெறும்.தெளிவு பெறும்வரை விளக்கம் தரப்படும்.

                          மாலை6.30மணிக்கு 
                              வழக்காடு மன்றம். 
                   திரு.A.K.பெருமாள்சாமி அவர்கள் ,
                                     துணைத்தலைவர்,
                         கொங்கு நண்பர்கள் சங்க அறக்கட்டளை-
                       சத்தியமங்கலம். அவர்கள் தலைமையிலும்,
       
               அரிமா.K.லோகநாதன் அவர்கள்-
                                 லோகு டிரைவிங் ஸ்கூல்-
                          சத்தியமங்கலம்அவர்களின்முன்னிலையிலும்                                                    நடைபெறுகிறது. 

                      ''இன்றைய பெண்கள் அதிகம் விரும்புவது?
 புத்தகம் வாசிப்பதையா? தொலைக்காட்சி பார்ப்பதையா? 
               
        என்ற தலைப்பில் நடைபெறும் வழக்காடுமன்றத்திற்கு,  ''இலக்கியவாணி'', பேராசிரியை. புனிதா ஏகாம்பரம், அவர்கள் நடுவராகவும்,,
  'புத்தகம் வாசிப்பதே' என்னும் தலைப்பிற்கு - 
''கவியரசி'' உமாமகேஸ்வரி அவர்களும்,,
 'தொலைக்காட்சி பார்ப்பதே' தலைப்பிற்கு -
''சொல்லரசி'' சித்ரா சுப்ரமணியம் அவர்களும் 
                       வழக்காடுகின்றனர்.
                வழக்காடு மன்றத்தின் விழா ஏற்பாடு 
லோகு டிரைவிங் ஸ்கூல்-சத்தியமங்கலம், 
நுகர்வோர் பாதுகாப்பு&சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு
 இணைந்து செய்துள்ளன.
  
 மேலும் விவரங்களுக்கு 
(1) அரிமா.K.லோகநாதன் அவர்கள்,-தலைவர் ,
 சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கம்-
உரிமையாளர்-லோகு டிரைவிங் ஸ்கூல்-சத்தியமங்கலம் .
           நகர்பேசி எண் +91 9443021196

  (2) திரு.C.பரமேஸ்வரன் அவர்கள்- செயலாளர்,
 நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு
 நகர்பேசி எண் +91 9585600733

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக