வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

சத்தி புத்தக கண்காட்சி - 2014 கருத்துக்கேட்பு அறிவிப்பு


மரியாதைக்குரியவர்களே,
                  வணக்கம். 
                       ''சத்தி புத்தக கண்காட்சி'' வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். சத்தியமங்கலம் புத்தக கண்காட்சி-2014 பற்றிய நிகழ்ச்சி நிரல் அறிவிப்பு விரைவில் இங்கு வெளியிடப்படும்.
நிகழ்ச்சியினை பொதுமக்களுக்கு பயனளிக்கும் விதமாக (1)கவியரங்கம்,(2)கருத்தரங்கம்,(3)உரையரங்கம்,(4)கலைநிகழ்ச்சிகள்,(5)நாட்டுப்புற கலைகள்,(6)எழுத்தாளர்&வாசகர் அரங்கம்,(7)பிரபலங்களுடன் சந்திப்பு,(8)பட்டிமன்றம்,(9)இணைய நண்பர்கள் சந்திப்பு,(10)சிறுவர்கள் விளையாட்டரங்கம்,(11)மாணவர்களுக்கான போட்டிகள்,(12)சிறுகதைப்போட்டி,(13) திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி,(14)சதுரங்கப்போட்டி,(15)போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டுப்போட்டி,(16) சாலைப் பாதுகாப்பு கருத்தரங்கம்,(17)குடும்ப உறவு மற்றும் மனித உறவு கருத்தரங்கம்,(18) ஆதரவற்றோர்,முதியோர் ,குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு கருத்தரங்கம்,(19)பயணிகள் பாதுகாப்பு கருத்தரங்கம்,(20) தமிழில் எளிதாக இணையத்தை பயன்படுத்துவோம் தலைப்பில் விளக்கங்களுடன் விவாதம் (21) கோலப்போட்டிகள்,(22)சமையல் கலாட்டா (23) மாறுவேடப்போட்டிகள்,(24)நாடகங்கள்என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தலாமா ? நடத்தவேண்டும் என்றால் எப்படி நடத்துவது? என தங்களது மேலான  கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
     தங்களது கருத்துக்களை மற்றும் ஆலோசனைகளை இந்தப்பக்கத்திலேயே பதியவும்.அல்லது  i love sathy ஃபேஸ்புக் வலைத்தளத்தில் கருத்துரை வழங்கவும்.
என 
அன்பன்
 பரமேஸ்வரன்.C
        

சத்தி புத்தக கண்காட்சி-நோக்கம்.

                   

மரியாதைக்குரியவர்களே,
             வணக்கம்.
 சத்தி புத்தக கண்காட்சி வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
 சத்தி புத்தக கண்காட்சியின் நோக்கமே,
 அனைத்து பள்ளிகள் ,கல்லூரிகள்,சமூக சேவை அமைப்புகள்,தன்னார்வலர்கள்,நூலகங்களில் அமைத்துள்ள வாசகர் வட்டங்கள்,தமிழ்ப்பண்பாட்டு மையங்கள்,செய்தியாளர்கள்,ஊடகங்கள்,அரிமா,சுழற்சங்கம்,ஜேசிஸ்,ஒய்ஸ்மென் சங்கம்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம், ஆசிரியர் சங்கம்,மாணவர் அமைப்புகள்,மகளிர் குழுக்கள்,அரசுத்துறைகள் அவர் தம் குடும்பங்கள் என அனைவரும் பயன்பெறும் விதமாக ......
        சமுதாய நலனுக்கான புத்தகங்கள்,நாட்டின் முன்னேற்றத்திற்கான புத்தகங்கள்,இலக்கியம்,வரலாறு,அறிவியல் கண்டுபிடிப்புகள்,தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் அதன் விளக்கங்கள்,வணிகம் சார்ந்த விசயங்கள்,வேளாண்மை சார்ந்த விவரங்கள்,மாணவர்களுக்கான முன்னேற்றம் மற்றும் தன்னம்பிக்கை,சார்ந்த புத்தகங்கள்,உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வாய்ப்பு சார்ந்த புத்தகங்கள்,இல்லத்தரசிகளுக்கான பயனுள்ள குறிப்புகள்,வீட்டு உபயோகம் சார்ந்த தகவல்கள் அடங்கிய புத்தகங்கள்,இளைய சமுதாயத்திற்கான நல்லொழுக்கம் வளர்க்கும் புத்தகங்கள்,குழந்தைகளின் திறன்களை வளர்க்கும் புத்தகங்கள், என பன்முகத் தலைப்புகளில் , தினந்தோறும் காலை 10மணி முதல் இரவு 9மணி வரை சிறப்பு விருந்தினர் உரைகள் ,சொற்பொழிவுகள்,இணைய நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள்,எழுத்தாளர்கள் மற்றும் வாசிப்பாளர் சந்திப்பு நிகழ்ச்சிகள்,புத்தக மதிப்பாய்வு நிகழ்ச்சிகள்,கருத்தரங்க நிகழ்ச்சிகள்,அறிவுத்திறனை வளர்க்கும் கட்டுரை,ஓவியம்,கதை,கவிதை,கோலம்,பட்டிமன்றம்,சதுரங்கம் போன்ற போட்டிகள் வைத்தும் சத்தி புத்தக கண்காட்சியை அறிவுத் திருவிழாவாகவும் பண்பாட்டுத் திருவிழாவாகவும் நடத்த வேண்டும்.நம்ம சத்தியமங்கலம்,தாளவாடி,கடம்பூர் மலைப்பகுதிகள்,தூக்க நாயக்கன்பாளையம்,பவானிசாகர் என சத்தி தாலூகா  வட்டார மக்களுக்கும் பயனளிக்க வேண்டும்.பொதுமக்களுக்கு  தேவைப்படும் புத்தகங்களை எளிதாக சத்தியமங்கலத்திலேயே வாங்க வாய்ப்பு அளித்து நல்ல வழிகாட்டியாக உதவிட வேண்டும். பொதுமக்களின் வாசிப்புத்திறனை மேம்படுத்த வேண்டும்.அதிகப்படுத்த வேண்டும்.புத்தகங்களின் பெருமைகளை நம்ம பகுதி மக்களுக்கும் புரியவைக்க வேண்டும். என்பதே ஆகும்.

சத்தியமங்கலம் புத்தகத் திருவிழா-2014


மரியாதைக்குரியவர்களே,
                            வணக்கம்.
      SATHY BOOK FAIR என்னும் ''சத்தி புத்தகக் காட்சி'' வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.வருகிற 2014அக்டோபர் 15ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை ஈரோடு மாவட்டம் ,சந்தன நகரம் என்றழைக்கப்படும் நம்ம சத்தியமங்கலத்தில் முதலாம் ஆண்டு புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது.அதன் விவரம் பின்வரும் நாட்களில் இங்கு விளக்கமாக பதிவிடப்படும்.முதல் கட்ட ஆலோசனைக்கூட்டம் நடைபெறும் தேதி மற்றும் இடம் விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.
 என
 அன்பன்
 பரமேஸ்வரன்.C
செயலாளர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு. 

( மற்றும் தலைவர் சத்தி செஸ் அகாடமி & தேசிய கண்ணொளி விழிப்புணர்வு இயக்கம் & சாலை பாதுகாப்பு இயக்கம்)