திங்கள், 6 ஜூலை, 2015

பிரம்மந்தண்டு செடியின் மருத்துவப்பயன்கள்..
வேறுபெயர்கள் குறுக்குச்செடிமற்றும் குயோட்டிப் பூண்டு
ஆங்கிலப் பெயர் ARGEMONE MEXICANA.  தாவரக்குடும்பம் -: PAPAVERACEAE.

பொதுவான குணம் 
      இது தமிழகமெங்கும் தரிசு நிலங்களில்,ஆற்றங்கரைகளில்சாலை யோரங்களில் தானே வளரும் சிறு செடி. சுமார் 2-3 அடி உயரம் வரை வளரக்கூடியது. காம்பில்லாமல் பல மடல்களான உடைந்த கூறிய முட்களுள்ள இலைகளையும்,பளிச்சிடும் மஞ்சள் நிறப் பூக்களையும்காய்களுக்குள் கடுகு போன்ற விதைகளையும் உடையசிறு செடி. நேராக வளரக்கூடியது. பால் மஞ்சள் நிறமாக இருக்கும். இலைகளின் மீது வெண்ணிறப் பூச்சு (சாம்பல்) காணப்படும் செடி.

மருத்துவக் குணங்கள்
இதன் இலைச்சாற்றை பத்து மில்லியாக காலையில் வெறும் வயிற்றில் 1மாதம் கொடுத்து வரச் சொறிசிரங்குமேகரணங்கள்குட்டம் ஆகியவை தீரும்.
இதன் இலையை அரைத்துத் தேள் கடி வாயில் வைத்துக் கட்டினால் தேள் கடி விடம் இறங்கும்.
சமூலச்சாறு 30 மி.லி. கொடுத்துக் கடிவாயில் அரைத்துக் கட்ட பாம்பு விடம் தீரும் பேதியாகும். உப்பில்லாப் பத்தியம் இருத்தல் வேண்டும்.
இலையை அரைத்துப் பூசி வர சொறிசிரங்கு நீர் வடியும். கரப்பான் படை குணமடையும். உள்ளங்கால்,கைபாதங்களில் வரும் புண்கள் ஆறும்.
பொன்னாங்கண்ணிசோற்றுக் கற்றாழைகரிசாலை போல கண் நோய்க்கு நல்ல குணமளிக்கும். பூவை நீரில் ஊறவைத்து அந்த நீரை தலைக்குத் தேய்த்துக் குளிக்க 40 நாளில் கண் பார்வை மங்கல்எரிச்சல்நீர் வடிதல் குணமாகும். இதன் இலையை ஒடித்தால் பால் வரும்இந்த பாலை கண்ணில் விட கண்வலிசதை வளருதல்சிவத்தல்அரிப்புகூச்சம் ஆகியன குணமாகும்.
இதன் விதையை நெருப்பிலிட்டுப் புகைத்து அப் புகை வாயில் படுமாறு செய்தால் சொத்தைப்பல் புழு விழும். வலி தீரும்செடியை உலர்த்திய பின் எடுத்துச் சாம்பலாக்கிதுணியில் சலித்து வைக்கவும். இப்பொடியில் பல் துலக்க பல் ஆட்டம்சொத்தைசீழ் வடிதல்வீக்கம் குணமடையும். சிறந்த மருந்து பற்பொடி இதுவாகும்.
இதன் சாம்பல் பொடி 1-2 கிராம் தேனில் சாப்பிட்டு வர ஆஸ்துமாஇரைப்பு,இருமல்காசம் ஆகிய நோய்கள் குணமாகும்இரு வேளை 48 நாள் சாப்பிட வேண்டும்.
50 மி.லி.பன்னீரில் ஒரு கிராம் இதன் சாம்பலைக் கரைத்து வடித்த தெளி நீரைச் சொட்டு மருந்தாகப் பயன்படுத்தலாம். கண் எரிச்சல்வலிசிவப்புஆகியவற்றிக்குச் சொட்டு மருந்தாகப் பயன் படுத்த குணமாகும்.
இச் சாம்பல் பொடியை கிராம் அளவு பசு வெண்ணெயுடன் மத்தித்து காலைமாலை 48-96 நாள் சாப்பிட குட்ட நோய் குணமாகும். புளிபுகை,போகம்புலால் நீக்க வேண்டும்.
இலை சூரணம்விதைச் சூரணம் கலந்து அரிசி எடை காலைபாலை தேனில் கொள்ள க்ஷய இருமல்நுரையீரல்சளி இருமல் தீரும்.
இதன் வேரை அரைத்து கிராம் அளவு 50 மி.லி. வெந்நீரில் கரைத்துகாலை வெறும் வயிற்றில் கொடுக்க மலக் குடல்புழுகீரிப் பூச்சிகள் வெளியேறும்.
இதன் விதையைப் பொடித்து இலையில் சுருட்டிப் பீடி புகைப்பது போல் புகையை இழுத்து வெளியில் விடப் பல்வலிபற்சொத்தைபற்புழு ஆகியவை தீரும்.
50 கிராம் வேரை 200 மி.லி. நீருல் நன்றாகக் கொதிக்க வைத்துவடித்துகுடிநீராகக் குடித்து வர காச நோய்மேக நோய் குணமடையும். ‘ மூலத்தில்பிரமந்தண்டு வடவேரை வணங்கி பூணவே குழிசமாடி புகழ்ச்சியாய் கட்டிவிட தோன்றிதாமே... பேய் ஓடும்’ இது பாட்டு. இதன் வடபக்க வேரை வழிபாடு செய்து எடுத்து தாயத்தில் வைத்துக் கட்ட பேய்ஓடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக