திங்கள், 13 அக்டோபர், 2014

அனைவரும் வாங்க! அறிவுச்செல்வத்தை அள்ளிச்செல்லுங்க!!


மரியாதைக்குரியவர்களே,
                     வணக்கம்.சத்தியமங்கலம் புத்தக கண்காட்சி வலைப்பக்கத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.மஞ்சள் மாநகரமாம் ஈரோடு மாவட்டத்தின் சந்தன நகரமாம் சத்தியமங்கலம் வட்டத்திலுள்ள கொங்கு திருமண மண்டபத்தில் வருகிற அதாவது (நாளை) 15-10-2014 புதன்கிழமை முதல் 19-10-2014 ஞாயிற்றுக்கிழமை வரை ஐந்து நாட்கள் மாபெரும் புத்தக கண்காட்சி நடைபெறுகிறது.நமக்குத்தேவையான புத்தகங்களை அதுவும் தள்ளுபடி விலையில் விற்பனையாகிறது.
        சத்தி புத்தக திருவிழாவில்  சிறுவர் முதல் பெரியவர் வரை ஆண்,பெண் என அனைத்து வயதினரும் கொண்டாடும்விதமாக சிறுவர் நீதிக்கதைகள்,சிறுவர் படக்கதைகள்,பகுத்தறிவு,கலை,இலக்கியம்,வரலாறு,சமூகவியல்,தொழில்நுட்பங்கள்,வழிகாட்டி நூல்கள்,சுயமுன்னேற்ற நூல்கள்,தொழில் முன்னேற்ற நூல்கள்,மருத்துவ நூல்கள்,குடும்ப நலன் சார்ந்த நூல்கள்,ஆன்மீகம்,கட்டுரை,நாவல்கள்,பன்மொழி நூல்கள்,கவிதைகள்,நாடகங்கள்,என அனைத்து துறை சார்ந்த பல்லாயிரக்கணக்கான நூல்கள்,பல்வேறு தலைப்புகளில் பயன்தரும் நீல்கள்,நம்ம ஊரில் நம்மைத்தேடி வந்து குவிந்துள்ளன.கரும்பு தின்னக் கூலி கொடுப்பதைப்போல!!!!!!!!!!!!
                                வாசிக்கும் பழக்கத்தை பரவலாக்கவும்,சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும்   தினசரி மாலை 6.30மணிக்கு நம் வாழ்க்கைக்குத்தேவையான கருத்துக்களை ஆர்முடன் கேட்குபடியாக எடுத்துக்கூற புகழ்பெற்ற பேச்சாளர்கள், பிரபலங்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், என சான்றோர் வருகை புரிந்து நல்ல கருத்துக்களை தர உள்ளார்கள்.சாலை பாதுகாப்பு பற்றிய கருத்தரங்குகள்,கண்களை காப்போம் ,இணையதள நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் என அறிவுத்திருவிழா நிகழ்ச்சிகளாக நடக்கிறது.வாய்ப்பை பயன்படுத்தி பொழுதுபோக்காக ஒரு வாழ்க்கை வழிகாட்டி வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுங்க!.....
.என 
அன்புடன் வரவேற்கும் 
                                      அன்பன்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக