நம்ம வட்டார மருத்துத் தாவரங்களை அடையாளப்படுத்துவோம்..மூலிகைத் தாவரங்களை தொகுத்து சேமிப்போம்.
புதன், 22 ஏப்ரல், 2015
தாளவாடி கிளை TNSTC BM -மரணமடைந்த தகவல்..
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
கடந்த 2015 ஏப்ரல் 19 ஆம் தேதியன்று தாளவாடி கிளையில் கற்பூரவள்ளி நாற்று நட்டுவைத்து மருத்துவத்தாவரங்கள் சேகரித்து வளர்த்து பாதுகாப்போம் என உறுதி ஏற்று தமிழர் மருத்துவமுறைக்கு ஆதரவளித்த
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தாளவாடி கிளை மேலாளர் ஆறுமுகம்அவர்கள் இன்று மாரடைப்பால் மரணமடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஐயா அவர்களது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க!
சிந்தை களங்கிட நின்றவர் வாழ்க !
பூமியில் ஜனனத்தைப்போல் ஒரு புதியது இல்லை!
மரணத்தை போல் ஒரு பழையது இல்லை!
இரண்டும் இல்லாவிடில் இயற்கையும் இல்லை!
இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை!
பாசம் உளாவிய கண்களும்எங்கே!
மகிழ்ந்து குழாவிய கைகளும் எங்கே !
தேசம் உளாவிய கால்களும் எங்கே!
தீயுண்டது என்றது சாம்பலும் இங்கே!,
பூமிக்கு நாம் ஒரு யாத்திர வந்தோம்!
யாத்திரை தீரும் முன்நித்திரை கொள்வோம்!
நித்திரை கொள்வது நியதி என்றாலும்!
யாத்திரை என்றும் தொடர்கதையாகும் !
கண்ணில் கண்டது காற்றுடன் போக !
மண்ணில் முளைத்தது மண்ணுடன் சேர்க!
எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக!
எச்சங்களாய் அந்த இன்னுயிர் வாழ்க!
மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க!
பார்வைகள் அனைத்தும் சூரியனில் சேர்க!
போனவர் புண்ணியம் நம்முடன் சேர்க !
நீரில் மிதக்கும் கண்களும் காய்க!
நிம்மதி நிம்மதி இவ்விடம் சேர்க.!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக